வால்பாறை அருகே கரடிகள் தாக்கி ஒருவர் படுகாயம் : வனச்சரக அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள்.

வால்பாறை அருகேயுள்ள இஞ்சிபாறை எஸ்டேட், லோயர் டிவிசன் பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் பால் சப்ளை செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவரை 2 கரடிகள் தாக்கியதில் கையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறை அருகே கரடிகள் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வால்பாறை அருகேயுள்ள இஞ்சிபாறை எஸ்டேட், லோயர் டிவிசன் பகுதியை சேர்ந்தவர் தங்கம்(53). இவர் எஸ்டேட் பகுதியில் மாடுகள் வளர்த்து வீடுகளுக்கு பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் வீடுகளுக்கு பால் கொடுக்க சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, தேயிலை தோட்டம் பகுதியில் இருந்த 2 கரடிகள் அவரை தாக்கி இடது கையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரைகாப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்தவனத்துறை சரகர் மணிகண்டனிடம் மருத்துவமனையில் நின்று இருந்த உறவினர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கூட்டத்தை கலைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...