வால்பாறை அருகே கரடிகள் தாக்கி ஒருவர் படுகாயம் : வனச்சரக அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள்.

வால்பாறை அருகேயுள்ள இஞ்சிபாறை எஸ்டேட், லோயர் டிவிசன் பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் பால் சப்ளை செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவரை 2 கரடிகள் தாக்கியதில் கையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறை அருகே கரடிகள் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வால்பாறை அருகேயுள்ள இஞ்சிபாறை எஸ்டேட், லோயர் டிவிசன் பகுதியை சேர்ந்தவர் தங்கம்(53). இவர் எஸ்டேட் பகுதியில் மாடுகள் வளர்த்து வீடுகளுக்கு பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் வீடுகளுக்கு பால் கொடுக்க சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, தேயிலை தோட்டம் பகுதியில் இருந்த 2 கரடிகள் அவரை தாக்கி இடது கையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரைகாப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்தவனத்துறை சரகர் மணிகண்டனிடம் மருத்துவமனையில் நின்று இருந்த உறவினர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கூட்டத்தை கலைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...