கோவை பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 35 லட்சம் மதிப்பிலான உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ள தன்னார்வ அமைப்பு...!

கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் -323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையை அடுத்த பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்ககு ரவுண்ட் டேபிள் இந்தியா (ஆர்.டி.ஐ) அமைப்பு சார்பாக 35 லட்சம் மதிப்பிலான உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி வழங்கியுள்ளது.

ப்ராஜெக்ட் ஹீல் (உடல்நல மேம்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை) என்ற ஆர்.டி.ஐ இன் முயற்சியின் கீழ், கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள்-323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.



உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய தலைவர் டேபுலர். மனிஷ் லகோடியா மற்றும் தலைவர் நிரவ் கெனியா ஸ்பார்க் 323 மற்றும் டேபுலர்.குனால் சங்கனி- ஐபிசி ஸ்பார்க் 323 ஆகியோர் திறந்து வைத்தனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா, "ஜி.என் குழுமத்தின் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் இந்த முயற்சி சாத்தியமானது. ரவுண்ட் டேபிள் இந்தியாவின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் எங்கள் பங்களிப்பை தருவோம் என உறுதியளித்தனர்."

பூலுவம்பட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் ஏற்படுத்தி கொடுத்தது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள் என்று சுகாதார துணை இயக்குநரும் டாக்டர் அருணா மற்றும் உள் நோயாளிகள் பிரிவின் மருத்துவ அலுவலருமான கனகராணி தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா 323 தலைவர் டேபுலர். நிரவ் கெனியா, மற்றும் ஆர்.டி.ஐ நிர்வாகிகள் , மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...