கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் -323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையை அடுத்த பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்ககு ரவுண்ட் டேபிள் இந்தியா (ஆர்.டி.ஐ) அமைப்பு சார்பாக 35 லட்சம் மதிப்பிலான உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி வழங்கியுள்ளது.
ப்ராஜெக்ட் ஹீல் (உடல்நல மேம்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை) என்ற ஆர்.டி.ஐ இன் முயற்சியின் கீழ், கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள்-323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய தலைவர் டேபுலர். மனிஷ் லகோடியா மற்றும் தலைவர் நிரவ் கெனியா ஸ்பார்க் 323 மற்றும் டேபுலர்.குனால் சங்கனி- ஐபிசி ஸ்பார்க் 323 ஆகியோர் திறந்து வைத்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா, "ஜி.என் குழுமத்தின் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் இந்த முயற்சி சாத்தியமானது. ரவுண்ட் டேபிள் இந்தியாவின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் எங்கள் பங்களிப்பை தருவோம் என உறுதியளித்தனர்."
பூலுவம்பட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் ஏற்படுத்தி கொடுத்தது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள் என்று சுகாதார துணை இயக்குநரும் டாக்டர் அருணா மற்றும் உள் நோயாளிகள் பிரிவின் மருத்துவ அலுவலருமான கனகராணி தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா 323 தலைவர் டேபுலர். நிரவ் கெனியா, மற்றும் ஆர்.டி.ஐ நிர்வாகிகள் , மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ப்ராஜெக்ட் ஹீல் (உடல்நல மேம்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை) என்ற ஆர்.டி.ஐ இன் முயற்சியின் கீழ், கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள்-323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய தலைவர் டேபுலர். மனிஷ் லகோடியா மற்றும் தலைவர் நிரவ் கெனியா ஸ்பார்க் 323 மற்றும் டேபுலர்.குனால் சங்கனி- ஐபிசி ஸ்பார்க் 323 ஆகியோர் திறந்து வைத்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா, "ஜி.என் குழுமத்தின் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் இந்த முயற்சி சாத்தியமானது. ரவுண்ட் டேபிள் இந்தியாவின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் எங்கள் பங்களிப்பை தருவோம் என உறுதியளித்தனர்."
பூலுவம்பட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் ஏற்படுத்தி கொடுத்தது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள் என்று சுகாதார துணை இயக்குநரும் டாக்டர் அருணா மற்றும் உள் நோயாளிகள் பிரிவின் மருத்துவ அலுவலருமான கனகராணி தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா 323 தலைவர் டேபுலர். நிரவ் கெனியா, மற்றும் ஆர்.டி.ஐ நிர்வாகிகள் , மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.