மாவட்ட நிர்வாக செயல்பாடுகளை அறிந்து கொள்ள மாணவர்களுக்கு 6 மாத பயிற்சி - கோவை ஆட்சியர் சமீரன் தகவல்..!

இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு 45நாள் பயிற்சியும், பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான 6 மாத பயிற்சியில் பங்கேற்க http://coimbatore.nic.in என்ற லிங்கில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.



கோவை: மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள மாணவர்களுக்கு 6 மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும்,செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடி திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில், தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக, ஆட்சியரின் படிப்பிடை பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளது.

இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சியும், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மற்றும் முதுகலை பட்டப்படிப்புபயிலும் மாணவர்களுக்கு, ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, http://coimbatore.nic.in என்ற வலைத்தள பக்கத்தில் சென்று வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம், கல்வி சார்ந்த நோக்கத்துக்காக அளிக்கப்படுகிறது.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...