கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட நால்வர் மீது வழக்குப்பதிவு; பவுன்சர்களிடம் அடி வாங்கும் வீடியோ வைரல்…!

ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் தம்பதிகளுக்குக்கான நிகழ்ச்சியில், தங்களையும் அனுமதிக்கும்படி தகராரில் ஈடுபட்ட பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை ரேஸ் கோர்ஸ்பகுதியில் உள்ள பாப்பிஸ் நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை அன்று தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி (Couples Night) நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தம்பதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இதற்கான ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு பலகையையும் வைத்திருந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விலை உயர்ந்த காரில் வந்த ஆண்கள் நான்கு பேர், நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களையும் அனுமதிக்குமாறு ஹோட்டல் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இது தம்பதிகள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று பாதுகாவலர்கள் எடுத்துச் சொல்லி, அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் பாதுகாவலர்களை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களை தாக்கி விட்டு, நாங்கள் யார் என்று தெரியுமா..? எனக் கூறி மீண்டும் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றதாக தெரிகிறது.

இதனால் தற்காப்பிற்காக ஹோட்டல் பவுன்சர்கள், தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் தாக்கி வெளியே அனுப்பினர்.இதையடுத்து அவர்கள் சொகுசு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து பாப்பிஸ் ஹோட்டல்,கணக்காளர் விஷ்வபாரதி (24), ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தகராரில் ஈடுபட்ட லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசியஹோட்டல் நிர்வாகத்தினர், சம்பவத்தன்று வந்த நான்கு பேர் ஏற்கனவே குடி போதையில் இருந்ததாகவும், நடைபெறும் நிகழ்ச்சி தம்பதிகளுக்கானது என்று எவ்வளவு எடுத்து சொல்லியும் தொடர்ந்து உள்ளே அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், உள்ளே அனுமதிக்க அதிக பணம் தருகிறோம் என்று பேசி வந்தவர்கள், ஒரு கட்டத்தில் காரில் இருந்து கத்தியை எடுத்து வந்து மிரட்ட துவங்கினர். இதனால், வேறு வழியின்றி அனைவரின் பாதுகாப்பையும் கருதி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவர்களை தாக்கினர்.

சம்பவம் குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தீவிரமாக போலீசார் தேதி வருவதாக சொல்லப்படும்.நிலையில், இதில், ஜான்சன் என்பவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையின் முக்கிய பகுதியில் உள்ள ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட நபர்கள் அடி வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...