சமூக நீதி நாளை முன்னிட்டு, கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி துறையின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் கோட்டயம் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கேரளா: தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு கேரளாவில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 144வது பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சமூக நீதி நாளை முன்னிட்டு, கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்தவிழாவில் கேரளா அரசின் சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயஸ்ரீ, தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையின் அருகே அமைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராதிகா ஷியாம் துணை தலைவர் பி.டி.சுபாஷ், நகராட்சி உறுப்பினர்கள் ராஜசேகரன், இப்ராஹிம் பழையா கடவாய், கவிதா ராஜேஷ், ராஜஸ்ரீ, ரேணுகா, பிஜிமோல், பிரீத்தா ராஜேஷ், சந்திரசேகரன், அசோகன், வைக்கம் வட்டாட்சியர் விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின் 144வது பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சமூக நீதி நாளை முன்னிட்டு, கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்தவிழாவில் கேரளா அரசின் சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயஸ்ரீ, தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையின் அருகே அமைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராதிகா ஷியாம் துணை தலைவர் பி.டி.சுபாஷ், நகராட்சி உறுப்பினர்கள் ராஜசேகரன், இப்ராஹிம் பழையா கடவாய், கவிதா ராஜேஷ், ராஜஸ்ரீ, ரேணுகா, பிஜிமோல், பிரீத்தா ராஜேஷ், சந்திரசேகரன், அசோகன், வைக்கம் வட்டாட்சியர் விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.