ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேத்துமடை கிழக்கு பிரிவில் உள்ள பச்சத்தண்ணி சரக பகுதியில் உள்ள ஓடையில் 40 வயது மிதக்கதக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில், கண்டறியப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் நேற்றைய தினம் (15.09.2022) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேத்துமடை கிழக்கு பிரிவில் உள்ள பச்சத்தண்ணி சரக பகுதியில் உள்ள ஓடையில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில், கண்டறியப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர், ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர் செல்வம் மற்றும், தன்னார்வலர்கள் முன்னிலையில், இன்று வனக் கால்நடை மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் கால்நடை மருத்துவர் கோவிந்தராஜ், உள்ளிட்ட குழுவினர் மூலம் இறந்த காட்டு யானைக்கு உடலை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில், ஆண் காட்டு யானை இயற்கையாக இறந்து இருக்கலாம் என்றும், ஆண் காட்டு யானையின் வயது சுமார் 40 ஆக இருக்கலாம் என்றும் மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டது, மேலும் இறந்த ஆண் யானையின் உடலிலிருந்து ஒரு ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் நேற்றைய தினம் (15.09.2022) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேத்துமடை கிழக்கு பிரிவில் உள்ள பச்சத்தண்ணி சரக பகுதியில் உள்ள ஓடையில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில், கண்டறியப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர், ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர் செல்வம் மற்றும், தன்னார்வலர்கள் முன்னிலையில், இன்று வனக் கால்நடை மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் கால்நடை மருத்துவர் கோவிந்தராஜ், உள்ளிட்ட குழுவினர் மூலம் இறந்த காட்டு யானைக்கு உடலை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில், ஆண் காட்டு யானை இயற்கையாக இறந்து இருக்கலாம் என்றும், ஆண் காட்டு யானையின் வயது சுமார் 40 ஆக இருக்கலாம் என்றும் மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டது, மேலும் இறந்த ஆண் யானையின் உடலிலிருந்து ஒரு ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.