கோவையில் நூதன மோசடி..! தங்க புதையல் கிடைத்ததாக கூறி அலுமினியத்தை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி..!

கருமத்தம்பட்டியில் மளிகை கடைக்காரரிடம் ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்ததாக கூறி, 10 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு இரு மர்ம நபர்கள் அலுமினியத்தை கொடுத்துவிட்டு தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டி வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் இவர் அந்த பகுதியில் இரண்டு வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம், தொடர்ச்சியாக இரு வாலிபர்கள் மளிகை கடைக்கு வந்து செல்வதுமாக இருந்துள்ளனர். பின்னர், மளிகை கடை உரிமையாளர் சதாசிவத்திடம், நாங்கள் குழி தோண்டும் பணி செய்து வருகிறோம்.



அப்போது, ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்தது. அதனை நாங்கள் உங்களிடம் கொடுக்கிறோம் 10 லட்ச ரூபாய் கொடுங்கள், எனக் கூறியுள்ளனர்.

அவர்கள் சொல்வது உண்மை என நம்பிய சதாசிவம், 10 லட்ச ரூபாயை கடைக்கு வந்த வாலிபர் இருவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டு அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதன்பின்பு அவர்கள் கொடுத்த நகையை பிரித்துப் பார்த்தபோது, அவை தங்கமில்லை, வெறும் அலுமினிய குண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம், இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து, கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அலுமினியத்தை தங்கம் என்று நம்பி ரூபாய் 10 லட்சத்தை ஏமாற்றி தப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...