கருமத்தம்பட்டியில் மளிகை கடைக்காரரிடம் ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்ததாக கூறி, 10 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு இரு மர்ம நபர்கள் அலுமினியத்தை கொடுத்துவிட்டு தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை கருமத்தம்பட்டி வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் இவர் அந்த பகுதியில் இரண்டு வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மே மாதம், தொடர்ச்சியாக இரு வாலிபர்கள் மளிகை கடைக்கு வந்து செல்வதுமாக இருந்துள்ளனர். பின்னர், மளிகை கடை உரிமையாளர் சதாசிவத்திடம், நாங்கள் குழி தோண்டும் பணி செய்து வருகிறோம்.

அப்போது, ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்தது. அதனை நாங்கள் உங்களிடம் கொடுக்கிறோம் 10 லட்ச ரூபாய் கொடுங்கள், எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் சொல்வது உண்மை என நம்பிய சதாசிவம், 10 லட்ச ரூபாயை கடைக்கு வந்த வாலிபர் இருவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டு அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதன்பின்பு அவர்கள் கொடுத்த நகையை பிரித்துப் பார்த்தபோது, அவை தங்கமில்லை, வெறும் அலுமினிய குண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம், இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து, கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அலுமினியத்தை தங்கம் என்று நம்பி ரூபாய் 10 லட்சத்தை ஏமாற்றி தப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த மே மாதம், தொடர்ச்சியாக இரு வாலிபர்கள் மளிகை கடைக்கு வந்து செல்வதுமாக இருந்துள்ளனர். பின்னர், மளிகை கடை உரிமையாளர் சதாசிவத்திடம், நாங்கள் குழி தோண்டும் பணி செய்து வருகிறோம்.
அப்போது, ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்தது. அதனை நாங்கள் உங்களிடம் கொடுக்கிறோம் 10 லட்ச ரூபாய் கொடுங்கள், எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் சொல்வது உண்மை என நம்பிய சதாசிவம், 10 லட்ச ரூபாயை கடைக்கு வந்த வாலிபர் இருவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டு அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதன்பின்பு அவர்கள் கொடுத்த நகையை பிரித்துப் பார்த்தபோது, அவை தங்கமில்லை, வெறும் அலுமினிய குண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம், இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து, கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அலுமினியத்தை தங்கம் என்று நம்பி ரூபாய் 10 லட்சத்தை ஏமாற்றி தப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.