கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐ.டி ஊழியர்கள் மூவர் கைது - 2 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்..!

துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த மூவர் பிடிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த தேனியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜசாந்த் (23), கோவையை சேர்ந்த கவின் ராஜ் (21) மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த முகேஷ் கண்ணன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...