துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த மூவர் பிடிபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த தேனியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜசாந்த் (23), கோவையை சேர்ந்த கவின் ராஜ் (21) மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த முகேஷ் கண்ணன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த தேனியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜசாந்த் (23), கோவையை சேர்ந்த கவின் ராஜ் (21) மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த முகேஷ் கண்ணன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.