100க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தொடங்கிய சர்வதேச பின்னலாடை நூல் கண்காட்சி - 3 நாட்கள் நடைபெறுகிறது..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் இந்தியா சார்பிலான சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சி இன்று துவங்கியது.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சியானது 100க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் யார்னெக்ஸ் (Yarnex) மற்றும் டெக்ஸ்ட் இந்தியா (Texs India) சார்பிலான சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சி இன்று துவங்கியது.



இக்கண்காட்சியை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், முதன்முறையாக சேலத்தில் தயாரிக்கப்பட்ட பேன்சி ரக நூல் அறிமுக விழாவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் 139 அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூல் தொடர்பான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.



ஃபைபர்களில் இயற்கை ரகம் - பருத்தி, கம்பளி, பட்டு, செயற்கை இரகத்தில் ரீஜெனரேட்டட் மற்றும் சிந்தடிக், யார்ன்களில் இயற்கையானவை மற்றும் பிளெண்டுகள் ஆடை துணி ரகங்களில் நிட்டட், எம்பிராய்டரி, கிரே, இம்போர்ட்டட், டெனிம்/பாட்டம் வெயிட், பிரிண்டட், ப்ராசஸ்டு, சில்க், ஸ்பெஷால்டி, வெல்வெட், வுலன், மில்கள் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட ஷர்டிங் ரகங்கள், டிரிம்ஸ், எம்பலிஷ்மெண்ட்ஸ், பட்டன் முதலான ஏராளமான நவீன தயாரிப்புகளை இந்த நிறுவனங்கள் தங்களது அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளன.

இன்று 15 ஆம் தேதி முதல் வரும் 17 தேதி என இந்த கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் நடைபெறும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...