100க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தொடங்கிய சர்வதேச பின்னலாடை நூல் கண்காட்சி - 3 நாட்கள் நடைபெறுகிறது..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் இந்தியா சார்பிலான சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சி இன்று துவங்கியது.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சியானது 100க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் யார்னெக்ஸ் (Yarnex) மற்றும் டெக்ஸ்ட் இந்தியா (Texs India) சார்பிலான சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சி இன்று துவங்கியது.



இக்கண்காட்சியை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், முதன்முறையாக சேலத்தில் தயாரிக்கப்பட்ட பேன்சி ரக நூல் அறிமுக விழாவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் 139 அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூல் தொடர்பான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.



ஃபைபர்களில் இயற்கை ரகம் - பருத்தி, கம்பளி, பட்டு, செயற்கை இரகத்தில் ரீஜெனரேட்டட் மற்றும் சிந்தடிக், யார்ன்களில் இயற்கையானவை மற்றும் பிளெண்டுகள் ஆடை துணி ரகங்களில் நிட்டட், எம்பிராய்டரி, கிரே, இம்போர்ட்டட், டெனிம்/பாட்டம் வெயிட், பிரிண்டட், ப்ராசஸ்டு, சில்க், ஸ்பெஷால்டி, வெல்வெட், வுலன், மில்கள் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட ஷர்டிங் ரகங்கள், டிரிம்ஸ், எம்பலிஷ்மெண்ட்ஸ், பட்டன் முதலான ஏராளமான நவீன தயாரிப்புகளை இந்த நிறுவனங்கள் தங்களது அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளன.

இன்று 15 ஆம் தேதி முதல் வரும் 17 தேதி என இந்த கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் நடைபெறும்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...