காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் ஆளில்லாத நேரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகேயுள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயன்ற நிலையில் அலாரம் ஒலித்ததால் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது.
இப்பகுதியில் மேட்டுப்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி கிளையின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் அந்த ஏ.டி.எம்.மில் எப்போதும் அதிகளவில் பணம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம்-க்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனால் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது. அலாரம் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்து சுதாரித்துக் கொண்ட அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளருக்கு வந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் கொள்ளை முயற்சி குறித்து அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மக்கள் தொகை அதிகம் உள்ள இடத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது.
இப்பகுதியில் மேட்டுப்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி கிளையின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் அந்த ஏ.டி.எம்.மில் எப்போதும் அதிகளவில் பணம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம்-க்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனால் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது. அலாரம் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்து சுதாரித்துக் கொண்ட அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளருக்கு வந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் கொள்ளை முயற்சி குறித்து அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மக்கள் தொகை அதிகம் உள்ள இடத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.