CCP Cup: கோவை மாநகர காவல்துறை Vs பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டிகள் - காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்கும் முயற்சியாக, வரும் 24 முதல் 30 தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இப்போட்டிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன.



கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, கோவை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை காக்கும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

வரும் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியானது காவல்துறைக்கு தனியாகவும், பொதுமக்களுக்கு தனியாகவும் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் - பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த தொடரின் லீக் போட்டிகள் கோவை வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதி போட்டிகள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி பி.எஸ்.ஜி ஐ.எம் மைதானத்தில் நடைபெற உள்ளது.



இதில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாவது பரிசு ரூ.7,500, நான்காவது பரிசு ரூ.3,000 வழங்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...