CCP Cup: கோவை மாநகர காவல்துறை Vs பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டிகள் - காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்கும் முயற்சியாக, வரும் 24 முதல் 30 தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இப்போட்டிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன.



கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, கோவை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை காக்கும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

வரும் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியானது காவல்துறைக்கு தனியாகவும், பொதுமக்களுக்கு தனியாகவும் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் - பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த தொடரின் லீக் போட்டிகள் கோவை வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதி போட்டிகள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி பி.எஸ்.ஜி ஐ.எம் மைதானத்தில் நடைபெற உள்ளது.



இதில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாவது பரிசு ரூ.7,500, நான்காவது பரிசு ரூ.3,000 வழங்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...