தடையை மீறி எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் - அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் உட்பட 390 பேர் மீது வழக்குப்பதிவு..!

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையின் போது, போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக ஐபிசி 151 பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: சுகுணாபுரத்தில் காவல்துறையின் தடை உத்தரவை மீறி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்.இ.டி விளக்கு கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நேற்று (13.09.2022) எஸ்.பி.வேலுமணி இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கோவை சுகுணாபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வந்த போது, அவரது வீட்டின் முன்பு கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடி கோஷங்களை எழுப்பினர்.

சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் தடை உத்தரவை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமோதிரன், கந்தசாமி, அம்மன் அர்ஜூணன், அமுல் கந்தசாமி, அருண்குமார், செல்வராஜ், ஜெயராம் மற்றும் 72 பெண்கள் உட்பட 390 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக ஐபிசி 151 பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...