ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் - கோவையில் வெட் கிரைண்டர், உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்திருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில், ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு பின் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 30,000 க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.



கோவை: ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவையில் வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சமீபத்தில் வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரியானது 5 சதவீதத்தில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதனை திரும்ப பெற கோரி பலமுறை வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோயமுத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறுந்தொழில் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், செளந்தர்மோகன் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார், மத்திய அரசு 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டர் மீது ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியது. அதனை திரும்ப பெற வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கம் எந்த அரசையும் எதிர்ப்பதும் அல்ல எந்த கட்சியையும் சார்ந்ததும் அல்ல. ஜி.எஸ்.டி வரி உயர்விற்கு முன் கல் பிரச்சனை இருந்து வந்தது. அதனை தொடர்ந்தே மூல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது .

இதனால் மிகப்பெரிய அளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 18% ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் இன்னும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலை உயர்வால் வாங்கும் மக்களும் குறைந்து விட்டனர்.

இதனால் வியாபாரம், உற்பத்தி என அனைத்தும் குறைந்து இந்த தொழிலை நம்பி இருக்க கூடிய பெண்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...