விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 3000க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம், 63 வேலம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகள் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதாக பல்லடத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பல்லடம் பகுதியில் உள்ள கல்வாரி ஒன்றிற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்தது.
இதனை அடுத்து சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அதிகாரிகளிடம் கல் குவாரிகளை மூட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தும், கல் குவாரிகளில் இருந்து தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி மற்றும் கட்டிட வேலைக்கு தேவையான எம்.சாண்ட் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இது போன்ற புகார் அளிப்பதால் கட்டிட பொருட்கள் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதுடன், தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
சமூக ஆர்வலர்கள் போர்வையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 3000 க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
800 க்கும் அதிகமான டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பிகளை நிறுத்தியுள்ளனர்.
விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகளும், உள்நோக்கத்துடன் கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிமையாளர்களும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.