கோவையில் தலைகீழாக நின்று இட்லி சாப்பிட்ட முதியவர் - ஆச்சரியத்துடன் கண்டு வியந்த பொதுமக்கள்..!

திருவண்ணாமலையை சேர்ந்த யோகாசன ஆசிரியரான பழனி என்பவர், சிரசாசனம் செய்தபடி இட்லி சாப்பிட்டதை அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் சிலர் செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.

கோவை: வரதராஜபுரம் அருகேயுள்ள விநாயகர் கோவிலில், முதியவர் ஒருவர் தலைகீழாக நின்றபடி இட்லி சாப்பிட்டது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரதராஜபுரம் அடுத்த உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் உள்ள விநாயகர் கோவிலின் அகஸ்தியர் சன்னதியில் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் பழனி (70) என்பவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், யோகா மாஸ்டர் பழனி, யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு யோகாசனம் செய்தவாறு விளக்கம் அளித்தார். அப்போது அகஸ்தியர் சன்னிதானம் முன்பு தலைகீழாக நின்றவாறு, அதாவது சிரசாசனம் செய்தபடி இட்லி சாப்பிட முடிவு செய்துள்ளார்.



இதையடுத்து சிரசாசனத்தில் நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் திராட்சை பழங்கள் மற்றும் பாலையும் குடித்தார். இதனை அங்கு இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும், சிலர் இதனை தங்களின் செல்போன்களில் வீடியோவும் எடுத்தனர்.

இதுகுறித்து பேசிய யோகா மாஸ்டர் பழனி, நான் ஏராளமான மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறேன். ஒரு மணி நேரத்திற்குள் பல்வேறு யோகாசனங்களை செய்து முடிப்பேன். பொதுமக்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்று தலைகீழாக நின்று இட்லி, பழம் மற்றும் பால் அருந்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...