போத்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ் (49) பணியின் போது மயங்கி விழுந்ததால், அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சுந்தராபுரத்தை அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). இவர் கடந்த 8 ஆண்டுகளாக போத்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல கோவிந்தராஜ் பணிக்குச் சென்ற நிலையில், மதியம் 2 மணியளவில், திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, சக ஊழியரான கலையரசன் என்பவர் கோவிந்தராஜின் மனைவி பூங்கோடிக்கு செல்போனில் அழைத்து கோவிந்தராஜன் மயங்கி விழுந்ததாகவும், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பூங்கோடி கோவை அரசு மருத்துவமனைச் சென்று மருத்துவர்களிடம் விசாரித்த போது, கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல கோவிந்தராஜ் பணிக்குச் சென்ற நிலையில், மதியம் 2 மணியளவில், திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, சக ஊழியரான கலையரசன் என்பவர் கோவிந்தராஜின் மனைவி பூங்கோடிக்கு செல்போனில் அழைத்து கோவிந்தராஜன் மயங்கி விழுந்ததாகவும், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பூங்கோடி கோவை அரசு மருத்துவமனைச் சென்று மருத்துவர்களிடம் விசாரித்த போது, கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.