போத்தனூரில் மயங்கி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி…!

போத்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ் (49) பணியின் போது மயங்கி விழுந்ததால், அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சுந்தராபுரத்தை அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). இவர் கடந்த 8 ஆண்டுகளாக போத்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல கோவிந்தராஜ் பணிக்குச் சென்ற நிலையில், மதியம் 2 மணியளவில், திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, சக ஊழியரான கலையரசன் என்பவர் கோவிந்தராஜின் மனைவி பூங்கோடிக்கு செல்போனில் அழைத்து கோவிந்தராஜன் மயங்கி விழுந்ததாகவும், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பூங்கோடி கோவை அரசு மருத்துவமனைச் சென்று மருத்துவர்களிடம் விசாரித்த போது, கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...