திருப்பூரில் இயங்கி வரும் கல்குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி ஆட்சியரிடம் புகார் மனு..!

திருப்பூரில் முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடி வரும் விவசாயிகள் மனு அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்குவாரி உரிமையாளர்களும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு எதிராக விவசாயிகள் புகார் மனு அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்குவாரி உரிமையாளர்களும் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான இச்சிப்பட்டி ,கோடங்கிபாளையம் , 63 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.



இந்த கல்குவாரிகளால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி அப்பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுவை அளித்தனர்.



இதேபோல், திருப்பூரில் இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அந்த மனுவில், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, கல்குவாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பவர்களை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீமிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று, இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...