வனத் தியாகிகள் தினத்தையொட்டி, கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் சேவாசிங், வனத் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கோவை: ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஎனக்கோவையில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு காவலர் சேவாசிங் தெரிவித்துள்ளார்.
வனங்கள் பாதுகாப்பு, தீத்தடுப்பு, வேட்டைத்தடுப்பு உள்ளிட்ட பணிகளின் போது உயிரிழந்த வனத்துறையினரை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் செப்., 11ம் தேதி வனத் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டும் கோவை கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் நேற்று வனத்தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த, 2017 முதல் தமிழக அரசு வனத்தியாகிகள் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்தாண்டு, நான்கு பேர் வனப்பணியின்போது உயிரிழந்துள்ளனர்.
வால்பாறையில் தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிக்கு, உணவுக்காக மிருகங்களை வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில வனப்பணிகளுக்கான மத்திய பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மற்றும் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வனங்கள் பாதுகாப்பு, தீத்தடுப்பு, வேட்டைத்தடுப்பு உள்ளிட்ட பணிகளின் போது உயிரிழந்த வனத்துறையினரை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் செப்., 11ம் தேதி வனத் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டும் கோவை கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் நேற்று வனத்தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த, 2017 முதல் தமிழக அரசு வனத்தியாகிகள் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்தாண்டு, நான்கு பேர் வனப்பணியின்போது உயிரிழந்துள்ளனர்.
வால்பாறையில் தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிக்கு, உணவுக்காக மிருகங்களை வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில வனப்பணிகளுக்கான மத்திய பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மற்றும் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.