கோவை வேடப்பட்டியை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் பாபு ராஜ் (47) என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை நாகராஜபுரம் - பேரூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, அடையாளம் தெரியாதநபர்கள் சிலர் உணவில் விஷம் கலந்து நாய்களுக்கு வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதனை உண்ட 5 தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதையடுத்து கோவை வேடப்பட்டியை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் பாபுராஜ் (47) என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாகவடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் திருடுவதற்காக நோட்டமிட்ட நபர்கள் யாரேனும் நாய்களுக்கு விஷம் வைத்தனரா? அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.