மின் கட்டண உயர்வு : கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு..!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று சோமனூர் பகுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அந்தந்த பகுதிகளில் பொதுக்குழு கூட்டி விவாதித்து மின் கட்டண உயர்வுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.



கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று சோமனூர் பகுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் மின்வாரியமும் ஒழுங்குமுறை ஆணையமும் 30% சாதா விசைத்தறியாளர்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதனால் பல ஆயிரக்கக்கான விசைத்தறியாளர்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, தமிழக அரசு கொண்டு வந்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அதேபோல, சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை சாதா விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முழுமையாக கட்டாமல் இருந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பில் அந்தந்த பகுதிகளில் பொதுக்குழு கூட்டி விவாதித்து வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...