கருமத்தம்பட்டி - அன்னூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை, சோமனூர் சாலைக்கு மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை: கருமத்தம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - அன்னூர் இடையேயான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை சோமனூர் சாலைக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை சோமனூர் சாலைக்கு மாற்றுவதற்கு அப்பகுதி மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத டாஸ்மாக் கடையை, ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சோமனூர் சாலையில் டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு புதிதாக அமைய உள்ள மதுபான கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அங்கு வந்த டாஸ்மாக் வட்டாட்சியர் அலமேலு மங்கை, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடை தற்போதைக்கு மாற்றப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்ன எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - அன்னூர் இடையேயான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை சோமனூர் சாலைக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை சோமனூர் சாலைக்கு மாற்றுவதற்கு அப்பகுதி மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத டாஸ்மாக் கடையை, ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சோமனூர் சாலையில் டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு புதிதாக அமைய உள்ள மதுபான கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த டாஸ்மாக் வட்டாட்சியர் அலமேலு மங்கை, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடை தற்போதைக்கு மாற்றப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்ன எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.