கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - பொதுமக்களுடன் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டம்..!

கருமத்தம்பட்டி - அன்னூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை, சோமனூர் சாலைக்கு மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கருமத்தம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - அன்னூர் இடையேயான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை சோமனூர் சாலைக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை சோமனூர் சாலைக்கு மாற்றுவதற்கு அப்பகுதி மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத டாஸ்மாக் கடையை, ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சோமனூர் சாலையில் டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு புதிதாக அமைய உள்ள மதுபான கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து அங்கு வந்த டாஸ்மாக் வட்டாட்சியர் அலமேலு மங்கை, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடை தற்போதைக்கு மாற்றப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்ன எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...