கோவையில் உலக முதலுதவி தினத்தன்று உலக சாதனை...! 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி.

மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் 5,386 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.



கோவை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவையில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு, முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி அளித்து உலக சாதனை படைக்கப்பட்டது.



உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில்

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளிக்கு சாதனை முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தனியார் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



இதில், அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள், குமரகுரு பொறியியல், அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவ - மாணவிகள், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த சாதனை நிகழ்ச்சியில், மொத்தம் 5,386 மாணவ -மாணவிகளுக்கு, மயக்கத்தில் இருப்பவருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.



இதனைஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பினர் நேரில் பார்த்து உலக சாதனையாக பதிவு செய்து விருதுகளையும் வழங்கினர். மேலும், இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்விற்கு, மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த சாதனையானது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவதாக, தெரிவித்தார்.





Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...