கோவையில் உலக முதலுதவி தினத்தன்று உலக சாதனை...! 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி.

மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் 5,386 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.



கோவை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவையில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு, முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி அளித்து உலக சாதனை படைக்கப்பட்டது.



உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில்

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளிக்கு சாதனை முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தனியார் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



இதில், அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள், குமரகுரு பொறியியல், அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவ - மாணவிகள், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த சாதனை நிகழ்ச்சியில், மொத்தம் 5,386 மாணவ -மாணவிகளுக்கு, மயக்கத்தில் இருப்பவருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.



இதனைஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பினர் நேரில் பார்த்து உலக சாதனையாக பதிவு செய்து விருதுகளையும் வழங்கினர். மேலும், இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்விற்கு, மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த சாதனையானது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவதாக, தெரிவித்தார்.





Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...