கோவையில் உலக முதலுதவி தினத்தன்று உலக சாதனை...! 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி.

மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் 5,386 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.



கோவை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவையில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு, முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி அளித்து உலக சாதனை படைக்கப்பட்டது.



உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில்

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளிக்கு சாதனை முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தனியார் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



இதில், அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள், குமரகுரு பொறியியல், அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவ - மாணவிகள், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த சாதனை நிகழ்ச்சியில், மொத்தம் 5,386 மாணவ -மாணவிகளுக்கு, மயக்கத்தில் இருப்பவருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.



இதனைஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பினர் நேரில் பார்த்து உலக சாதனையாக பதிவு செய்து விருதுகளையும் வழங்கினர். மேலும், இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்விற்கு, மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த சாதனையானது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவதாக, தெரிவித்தார்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...