பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 'மோடி கபடி லீக்' போட்டி: வரும் செப்டம்பர் 17, 18 யில் கோவையில் பல இடங்களில் போட்டிகள் ஏற்பாடு..!

கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.


கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் “மோடி கபடி லீக்” என்ற பெயரில் கபடி போட்டிகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவர் ராஜேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கபடி கழகத்தோடு இணைந்து “மோடி கபடி லீக்” என்ற பெயரில் கபடி போட்டிகளை நடத்தப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கான இறுதிப்போட்டி மதுரையில் வரும் செப் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இறுதி போட்டியில் மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது, என்றார்.

பேட்டியின் போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் நவீன் குமார், மாவட்ட துணை தலைவர் பிரனேஷ், மாவட்ட செயலாளர்கள் ராம்போ கோகுல், கிஷோர், குமார், வெங்கட் சுப்பு, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் சவுமியா ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...