பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 'மோடி கபடி லீக்' போட்டி: வரும் செப்டம்பர் 17, 18 யில் கோவையில் பல இடங்களில் போட்டிகள் ஏற்பாடு..!

கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.


கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் “மோடி கபடி லீக்” என்ற பெயரில் கபடி போட்டிகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவர் ராஜேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கபடி கழகத்தோடு இணைந்து “மோடி கபடி லீக்” என்ற பெயரில் கபடி போட்டிகளை நடத்தப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கான இறுதிப்போட்டி மதுரையில் வரும் செப் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இறுதி போட்டியில் மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது, என்றார்.

பேட்டியின் போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் நவீன் குமார், மாவட்ட துணை தலைவர் பிரனேஷ், மாவட்ட செயலாளர்கள் ராம்போ கோகுல், கிஷோர், குமார், வெங்கட் சுப்பு, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் சவுமியா ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...