கொடிசியாவில் செப்.14 முதல் 16-ம் தேதி வரை மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான 2 வது பதிப்பு கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து 88 நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும் ரூ.150 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என்று கொடிசியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: கொடிசியா மைதானத்தில் வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான 2 வது பதிப்பு கண்காட்சி நடைபெற உள்ளதாக கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

நாட்டிலேயே மூலப்பொருட்கள் இடுபொருட்கள் மற்றும் சேவைக் கண்காட்சியாக ”கோவையில் "RAW MAT INDIA 2022” எனும் கண்காட்சி கோவை கொடிசியாவில் வரும் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.



இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவர் திருஞானம், Raw mat India 2022 கண்காட்சியின் தலைவர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் சரவணக்குமார், சசிக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இந்த கண்காட்சியில், ஃபவுண்டரி, கட்டுமானம், ஆட்டோ மொபைல்ஸ், டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ராணுவம், எரிவாயு, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த கண்காட்சியில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து 88 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.



கண்காட்சியின் திறப்பு விழாவில், தலைமை விருந்தினராக சூலூர் விமானப் படை அதிகாரி ஏர் கம்மாடர் சஞ்சீவ் மற்றும் JSW நிறுவனத்தின் தலைமை விற்பனை மேலாளர் சஜி சாமுவேல் மற்றும் தரங் தேசாய் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

சுமார் பத்தாயிரம் பார்வையாளர்கள் மற்றும் 150 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள், என தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...