வார்டு எண் 18, 26, 10 மற்றும் 22 யில் பள்ளி, நகர்நல மைய கட்டிடம் என பல்வேறு கட்டுமான பணிகளை மேயர் கல்பனா துவங்கி வைத்தார்

ரூ.4.79 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடம், நகர்நல மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த மேயர், கட்டிடங்களை தரமாகவும், விரைவாகவும் கட்ட வேண்டும் என பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும்‌ மேற்கு மண்டலத்தில் ரூ.4.79 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பள்ளி, நகர்நல மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவக்கி வைத்தார்.

கோவை‌ மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும்‌ மேற்கு மண்டல பகுதிகளில்‌ 9 இடங்களில்‌ 4 கோடியே 79 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறை கட்டிடங்கள்‌, நகர்நல மையம்‌, பொதுக் கழிப்பிடம்‌, மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கப்பட உள்ளன.



இந்த கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த பூமிபூஜையில், கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.



பின்னர், மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் 18வது‌ வார்டுக்கு உட்பட்ட நல்லாம்பாளையம்‌, ராமசாமி நகா்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணி‌ மற்றும் வார்டு எண்‌.19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ரூ.99 லட்சத்து 10 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகளுக்கான கட்டுமான பணி துவங்கப்பட்டது.



இந்த பூமிபூஜையின் போது, 82 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டது.



மேலும்‌, அப்பள்ளியிலுள்ள கழிப்பறைகள்‌ சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கப்பட்டது.



இதனைத் தொடா்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.26க்கு உட்பட்ட பயனியர் (pioneer) மில் சாலையில்‌ உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.16 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டும்‌ கட்டுமான பணி‌, வார்டு எண்‌.25க்கு உட்பட்ட காந்திமா நகரில்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பொது கழிப்பிடம்‌ கட்டுமான பணியும் துவங்கி வைக்கப்பட்டது.



‌அதேபோல, 10வது வார்டுக்கு உட்பட்ட ராமானந்தா நகர்‌ மற்றும்‌ எஸ்‌.பி.எஸ்‌.நகரில்‌ ரூ.29 லட்சத்து 60 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணி‌,



ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறை கட்டுமான பணி‌ துவக்கி வைக்கப்பட்டது.



மேலும், கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22க்குட்பட்ட சேரன்‌ மா நகா்‌, அம்பாள்‌ நகர்‌ பகுதியில்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகாநல மையம்‌ கட்டுமானப் பணி,



மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16க்கு உட்பட்ட எம்‌.ஜி.ஆர்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி பள்ளியில்‌ ரூ.74 லட்சத்து 95ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ புதிய வகுப்பறை கட்டுமான பணி‌ என் மொத்தம்‌ ரூ.4 கோடியே 79 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து மேயர் கல்பனா துவக்கி வைத்தார்.

இதனையடுத்து பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்‌. முன்னதாக, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22க்குட்பட்ட சேரன்‌ மா நகரில்‌ மாநகராட்சி தள்ளுவண்டி தாய்மைப்‌ பணியாளா்களுக்கு மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளுக்கு தள்ளுவண்டிகளுக்கான புதிய குப்பைத்‌ தொட்டிகளை வழங்கினார்‌.

இந்நிகழ்ச்சிகளில்‌, மண்டல குழு தலைவா்கள்‌ கதாவேல்‌, கே.ஏ.தெய்வயயானை தமிழ்மறை, கல்விக்குழு தலைவர்‌ மாலதி நாகராஜ்‌, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, மாமன்ற உறுப்பினா்‌கள், உதவி ஆணையாளர்கள் முத்து ராமலிங்கம்‌(கிழக்கு), சேகர்(மேற்கு), மாநகர கல்வி அலுவலர்‌ கே.பாண்டிய ராஜ சேகர்‌, செயற்பொறியாளர்‌ முருகேசன்‌, உதவி செயற்பொறியாளா்‌ செந்தில்பாஸ்கா்‌, உதவி நகரமைப்பு அலுவலா்கள்‌ ஜெயலட்சுமி, கலாவதி, சுகாதார ஆய்வாளர்‌ ஜெரால்டு சத்ய புனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...