கோவையில் 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நண்பர்களை சந்தித்து முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..!

1972 ஆம் ஆண்டு கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பள்ளியில் சந்தித்து வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டனர்.


கோவை: 1972 ஆம் ஆண்டு கோவை துாய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை பொன்விழா ஆண்டில் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொன்விழா கொண்டாட்டத்தில், தாளாளர் ஹென்றி டேனியல் மற்றும் 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

"பள்ளி படிப்பு முடித்தும், ஐம்பது ஆண்டுகளாக, நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதும், இதுபோன்ற சந்திப்புகளை அவ்வப்போது நடத்தி, பள்ளி நாட்களை நினைவுப்படுத்திக் கொள்வதும், மகிழ்ச்சியான தருணங்கள். இந்நாளில், தங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை மறக்காமல் நன்றி கூறுவதோடு, அவர்களை கவுரவப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

இதுபோன்ற கூட்டங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். இது உங்களுக்கான நாள் என்பதால், வழக்கமான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் உங்கள் நண்பர்களுடன் வசந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,'' என்று பள்ளி தாளாளர் ஹென்றி டேனியல் பேசினார்.

இந்த பொன் விழா நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர்களான தாமரைச் செல்வன், ரகுநாதன், ஜெரோம் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து, தங்களது பள்ளி கால நினைவுகளை அசைபோட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...