கோவையில் 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நண்பர்களை சந்தித்து முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..!

1972 ஆம் ஆண்டு கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பள்ளியில் சந்தித்து வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டனர்.


கோவை: 1972 ஆம் ஆண்டு கோவை துாய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை பொன்விழா ஆண்டில் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொன்விழா கொண்டாட்டத்தில், தாளாளர் ஹென்றி டேனியல் மற்றும் 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

"பள்ளி படிப்பு முடித்தும், ஐம்பது ஆண்டுகளாக, நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதும், இதுபோன்ற சந்திப்புகளை அவ்வப்போது நடத்தி, பள்ளி நாட்களை நினைவுப்படுத்திக் கொள்வதும், மகிழ்ச்சியான தருணங்கள். இந்நாளில், தங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை மறக்காமல் நன்றி கூறுவதோடு, அவர்களை கவுரவப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

இதுபோன்ற கூட்டங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். இது உங்களுக்கான நாள் என்பதால், வழக்கமான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் உங்கள் நண்பர்களுடன் வசந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,'' என்று பள்ளி தாளாளர் ஹென்றி டேனியல் பேசினார்.

இந்த பொன் விழா நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர்களான தாமரைச் செல்வன், ரகுநாதன், ஜெரோம் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து, தங்களது பள்ளி கால நினைவுகளை அசைபோட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...