கோவையில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், துடியலூர் ராஜன் காலனி TVS நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். போதைப் பொருள்கள் குறித்து காவல்துறையை தொடர்பு கொள்ள 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை, சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், துடியலூர் ராஜன் காலனி TVS நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார் (48) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 100 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

காவல்துறையை தொடர்பு கொள்ள 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...