மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்- கொ.ம.தே.க.ஈஸ்வரன்


உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால், உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் விரைவாக நடத்த வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தமிழகத்திற்கு எதிரானது என தெரிவித்தார். 

இதே போல மற்ற மாநிலங்கள் பாதிக்கும் வகையில் மாநில அரசுகள் தன்னிச்சையாக ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவதை தவிர்க்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கும் மாணவர்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், அப்பாவி மாணவர்கள் மீது காவல் துறையினரால் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், நதிகளை இணைப்பது தொடர்பாக தமிழக பா.ஜ.க-வின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார். 

தேசிய நதிகளை இணைப்பதே நதிநீர் பிரச்சணைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையுமென கூறிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நதிகளை இணைக்க மக்கள் போராட்டம் நடத்த முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். 

விவசாயிகள் தற்கொலைகளுக்கு வங்கிக்கடனே காரணமெனவும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

வறட்சி பாதிப்புகள் தொடர்பாக மத்திய குழுவினர் கண்துடைப்பிற்காக பெயரளவு ஆய்வு நடத்தியதாகவும், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால், தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...