அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணியின் சகாக்களின் ரியல் எஸ்டேட் நிலங்களின் மதிப்பை உயர்த்தவே வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டரில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முந்தைய அதிமுக ஆட்சியாளர்களால் தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உகந்த இடம் இல்லை என்றும் முறையான திட்டமிடல் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணி முடிவடையுமா..? பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா..? என்ற கேள்வி எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று அதிமுக தரப்பில் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையான வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டமே முன்னாள் ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டர் குறித்து ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐஜி மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், 65 ஏக்கர் பரப்பளவில் 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேஸ்கோஸ் ரகுநாத், வெள்ளலூர் பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட பொழுது அது ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் இல்லை என்று மத்திய அரசாங்கம் புறம் தள்ளியது.
ஆனால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வெள்ளலூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட்டுக்காக நிலங்களை வாங்கி இருப்பதால், அதற்கான மதிப்பு கூட்டும் விதமாக வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான டெண்டரும் எஸ்.பி.வேலுமணியின் சகாக்களுக்கு விடப்பட்டது. 20 சதவீத பணிகளே முடிந்திருக்கின்ற நிலையில், 40 சதவிகித பணிகளுக்கான நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் 100 கோடி ரூபாய் அளவில் கொள்ளை அடித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
மாநகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் புறநகரான வெள்ளலூருக்கு பயணித்து பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாது. வெள்ளலூரில் அமைந்திருக்கின்ற குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதனால், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகாரில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முந்தைய அதிமுக ஆட்சியாளர்களால் தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உகந்த இடம் இல்லை என்றும் முறையான திட்டமிடல் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணி முடிவடையுமா..? பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா..? என்ற கேள்வி எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று அதிமுக தரப்பில் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையான வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டமே முன்னாள் ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டர் குறித்து ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐஜி மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், 65 ஏக்கர் பரப்பளவில் 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேஸ்கோஸ் ரகுநாத், வெள்ளலூர் பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட பொழுது அது ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் இல்லை என்று மத்திய அரசாங்கம் புறம் தள்ளியது.
ஆனால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வெள்ளலூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட்டுக்காக நிலங்களை வாங்கி இருப்பதால், அதற்கான மதிப்பு கூட்டும் விதமாக வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான டெண்டரும் எஸ்.பி.வேலுமணியின் சகாக்களுக்கு விடப்பட்டது. 20 சதவீத பணிகளே முடிந்திருக்கின்ற நிலையில், 40 சதவிகித பணிகளுக்கான நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் 100 கோடி ரூபாய் அளவில் கொள்ளை அடித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
மாநகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் புறநகரான வெள்ளலூருக்கு பயணித்து பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாது. வெள்ளலூரில் அமைந்திருக்கின்ற குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதனால், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகாரில் தெரிவித்துள்ளார்.