கோவை மாநகராட்சி நிர்வாகம் 2 நிறுவனங்களுக்கு சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள டேக்ட் அமைப்பு, முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: கோவையில் உரிமம் பெறாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வந்த 2 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்ததற்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் வருவாய்துறை ஊழியர் கனகாசலம் என்பவர் கோவை மாநகராட்சியில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கோவை மாவட்டம் டி.வி.எஸ் நகர் பகுதியில் இயங்கி வரும் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் பிரபு என்பவருக்கு சொந்தமான ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 தொழிற்சாலைகள் முறையான அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். பின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2 நிறுவனங்களையும் மூட வேண்டும் என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், புகாரில் குறிப்பிடப்பட்ட கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்த அதிகாரிகள் முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், புகார் அளித்துள்ள நபரின் வீட்டுக்கும் தொழில் கூடம் அமைந்திருக்கின்ற இடத்துக்கும் 700 மீட்டர் தொலைவு இருக்கும் போது, தொழில் கூடத்தின் மாசு எப்படி அவர் வீட்டை பாதிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசு என்ற பெயரில் கட்டிடத்தின் உரிமையாளரை பழி வாங்கும் நோக்கில், கனகாசலம் தந்த முகாந்திரமற்ற புகாரின் அடிப்படையில் இரண்டு தொழில் கூடங்கள் பலியானதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வருவாய்துறை ஊழியர் கனகாசலம் என்பவர் கோவை மாநகராட்சியில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கோவை மாவட்டம் டி.வி.எஸ் நகர் பகுதியில் இயங்கி வரும் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் பிரபு என்பவருக்கு சொந்தமான ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 தொழிற்சாலைகள் முறையான அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். பின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2 நிறுவனங்களையும் மூட வேண்டும் என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், புகாரில் குறிப்பிடப்பட்ட கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்த அதிகாரிகள் முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், புகார் அளித்துள்ள நபரின் வீட்டுக்கும் தொழில் கூடம் அமைந்திருக்கின்ற இடத்துக்கும் 700 மீட்டர் தொலைவு இருக்கும் போது, தொழில் கூடத்தின் மாசு எப்படி அவர் வீட்டை பாதிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசு என்ற பெயரில் கட்டிடத்தின் உரிமையாளரை பழி வாங்கும் நோக்கில், கனகாசலம் தந்த முகாந்திரமற்ற புகாரின் அடிப்படையில் இரண்டு தொழில் கூடங்கள் பலியானதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.