உரிய அனுமதி பெறாமல், பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த 2 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சீல் - டேக்ட் அமைப்பு கண்டனம்

கோவை மாநகராட்சி நிர்வாகம் 2 நிறுவனங்களுக்கு சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள டேக்ட் அமைப்பு, முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை: கோவையில் உரிமம் பெறாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வந்த 2 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்ததற்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் வருவாய்துறை ஊழியர் கனகாசலம் என்பவர் கோவை மாநகராட்சியில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கோவை மாவட்டம் டி.வி.எஸ் நகர் பகுதியில் இயங்கி வரும் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் பிரபு என்பவருக்கு சொந்தமான ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 தொழிற்சாலைகள் முறையான அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். பின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2 நிறுவனங்களையும் மூட வேண்டும் என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.



இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், புகாரில் குறிப்பிடப்பட்ட கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்தனர்.

இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்த அதிகாரிகள் முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், புகார் அளித்துள்ள நபரின் வீட்டுக்கும் தொழில் கூடம் அமைந்திருக்கின்ற இடத்துக்கும் 700 மீட்டர் தொலைவு இருக்கும் போது, தொழில் கூடத்தின் மாசு எப்படி அவர் வீட்டை பாதிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு என்ற பெயரில் கட்டிடத்தின் உரிமையாளரை பழி வாங்கும் நோக்கில், கனகாசலம் தந்த முகாந்திரமற்ற புகாரின் அடிப்படையில் இரண்டு தொழில் கூடங்கள் பலியானதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...