தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த பட்டியலை ஆட்சியரிடம் வழங்கிய கோவை அதிமுக எம்.எல்.ஏக்கள்..!

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த பட்டியலின் தொகுப்பை ஆட்சியர் சமீரனிடம் வழங்கி, அது குறித்து விளக்கமும் அளித்தனர்.


கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.



சமீபத்தில் கோவை ஈச்சனாரி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும், மாவட்ட ஆட்சியரிடம் இன்று அவரவர் தொகுதி பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.



இதனையடுத்து, 9 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமும் அளித்தனர்.



கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆட்சியரை சந்தித்து அவர் தொகுதி பிரச்சினைகளின் தொகுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...