அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த பட்டியலின் தொகுப்பை ஆட்சியர் சமீரனிடம் வழங்கி, அது குறித்து விளக்கமும் அளித்தனர்.
கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

சமீபத்தில் கோவை ஈச்சனாரி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும், மாவட்ட ஆட்சியரிடம் இன்று அவரவர் தொகுதி பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.

இதனையடுத்து, 9 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமும் அளித்தனர்.

கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆட்சியரை சந்தித்து அவர் தொகுதி பிரச்சினைகளின் தொகுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கோவை ஈச்சனாரி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும், மாவட்ட ஆட்சியரிடம் இன்று அவரவர் தொகுதி பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.
இதனையடுத்து, 9 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமும் அளித்தனர்.
கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆட்சியரை சந்தித்து அவர் தொகுதி பிரச்சினைகளின் தொகுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.