கோவை ராமநாதபுரம் பாலம்: 40 கிமீ வேகத்தில் செல்ல இந்த பாலத்தின் சாலை கட்டமைப்பு பாதுகாப்பானது - ஐ.ஐ.டி குழுவினர் பரிந்துரை

பாலத்தில் சுங்கம் மார்கமாக வளைவுக்கு முன் 150 மீட்டர் தூரத்தில் வேகம் காட்டி பொருத்தவும், இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட க்ராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை. அதேபோல, வடிவமைப்பு வேகம் மணிக்கு 40 கிமீ என கருதப்படுகிறது, இந்த வேகத்தில் செல்லும் போது .தற்போதைய சாலை சீரமைப்பு பாதுகாப்பானது.



கோவை: கோவை-திருச்சி சாலையில் 3.15 கி.மீ தூரத்திற்கு ரூ.238 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஜூன் 11 ம் தேதி திறக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட மறுநாளே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து இறந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு பேர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.

தொடர் விபத்துகள் காரணமாக, அங்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து விபத்துகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. எனவே, பாலத்தின் வடிவமைப்பை ஆய்வு செய்து, திருத்தங்கள் இருந்தால் பரிந்துரைக்க, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) கட்டமைப்பு பொறியியல் துறையின் நிபுணர்களின் உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியது.

அதன்படி, ஐஐடி யில் இருந்து வந்த குழுவினர், பாலத்தின் கட்டமைப்பு மற்றும் விபத்துகள் ஏற்பட சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர். விரைவில், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில், இன்று ஆய்வு அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சிவில் இன்ஜினியரிங் துறையின், இணைப் பேராசிரியர் முனைவர் கீதாகிருஷ்ணன் ராமதுரை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி, வேகமாக வாகனம் இயங்கியதே விபத்துக்கு காரணம் என்றும் எங்கெல்லாம் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

- கான்கிரிட் வேகத்தடை கன ரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினாலும் இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட க்ராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை.

- ரப்பர் தடுப்புகள் இருசக்கர வாகனத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி வேக உராய்வை தன்னுள் ஈர்க்கும் - இதனால் வேகம் மட்டுபடுத்தப்பட்டு விபத்து நடக்காது.

- பாலத்தை மீண்டும் இடித்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதுவரை நடந்த இரு சக்கர வாகன விபத்துகள் அனைத்தும் அதிக வேகமாக வந்ததால் நடைபெற்றதுள்ளது என்று அறிவிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...