கோவை ராமநாதபுரம் பாலம்: 40 கிமீ வேகத்தில் செல்ல இந்த பாலத்தின் சாலை கட்டமைப்பு பாதுகாப்பானது - ஐ.ஐ.டி குழுவினர் பரிந்துரை

பாலத்தில் சுங்கம் மார்கமாக வளைவுக்கு முன் 150 மீட்டர் தூரத்தில் வேகம் காட்டி பொருத்தவும், இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட க்ராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை. அதேபோல, வடிவமைப்பு வேகம் மணிக்கு 40 கிமீ என கருதப்படுகிறது, இந்த வேகத்தில் செல்லும் போது .தற்போதைய சாலை சீரமைப்பு பாதுகாப்பானது.



கோவை: கோவை-திருச்சி சாலையில் 3.15 கி.மீ தூரத்திற்கு ரூ.238 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஜூன் 11 ம் தேதி திறக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட மறுநாளே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து இறந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு பேர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.

தொடர் விபத்துகள் காரணமாக, அங்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து விபத்துகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. எனவே, பாலத்தின் வடிவமைப்பை ஆய்வு செய்து, திருத்தங்கள் இருந்தால் பரிந்துரைக்க, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) கட்டமைப்பு பொறியியல் துறையின் நிபுணர்களின் உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியது.

அதன்படி, ஐஐடி யில் இருந்து வந்த குழுவினர், பாலத்தின் கட்டமைப்பு மற்றும் விபத்துகள் ஏற்பட சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர். விரைவில், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில், இன்று ஆய்வு அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சிவில் இன்ஜினியரிங் துறையின், இணைப் பேராசிரியர் முனைவர் கீதாகிருஷ்ணன் ராமதுரை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி, வேகமாக வாகனம் இயங்கியதே விபத்துக்கு காரணம் என்றும் எங்கெல்லாம் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

- கான்கிரிட் வேகத்தடை கன ரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினாலும் இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட க்ராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை.

- ரப்பர் தடுப்புகள் இருசக்கர வாகனத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி வேக உராய்வை தன்னுள் ஈர்க்கும் - இதனால் வேகம் மட்டுபடுத்தப்பட்டு விபத்து நடக்காது.

- பாலத்தை மீண்டும் இடித்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதுவரை நடந்த இரு சக்கர வாகன விபத்துகள் அனைத்தும் அதிக வேகமாக வந்ததால் நடைபெற்றதுள்ளது என்று அறிவிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...