சொகுசு காரில் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் உட்பட 4 பேர் மீது ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

பின்னர் போலீசாரின் சோதனையில் காரில் 21 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சொகுசு காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களது பெயர் கெளதம், உதயகுமார், தினேஷ் மற்றும் சுருதிகா என்பதும் நால்வரும் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அப்போது, புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
பின்னர் போலீசாரின் சோதனையில் காரில் 21 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சொகுசு காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களது பெயர் கெளதம், உதயகுமார், தினேஷ் மற்றும் சுருதிகா என்பதும் நால்வரும் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.