ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உட்பட 4 பேர் கைது

சொகுசு காரில் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் உட்பட 4 பேர் மீது ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.



பின்னர் போலீசாரின் சோதனையில் காரில் 21 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சொகுசு காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களது பெயர் கெளதம், உதயகுமார், தினேஷ் மற்றும் சுருதிகா என்பதும் நால்வரும் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.



தொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.



மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...