ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உட்பட 4 பேர் கைது

சொகுசு காரில் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் உட்பட 4 பேர் மீது ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.



பின்னர் போலீசாரின் சோதனையில் காரில் 21 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சொகுசு காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களது பெயர் கெளதம், உதயகுமார், தினேஷ் மற்றும் சுருதிகா என்பதும் நால்வரும் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.



தொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.



மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...