கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முனைப்புடன் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை பரப்பினை அதிகரிப்பது தொடர்பான பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் லட்சியமான 'பசுமை தமிழ்நாடு' திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் தலைமையில் அதிகாரிகளை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இக்குழுவானது வனப்பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப்பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல் விவசாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்பினை அதிகரிக்க மரம் வளர்த்தல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை தனியார் பங்களிப்போடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முனைப்புடன் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு இன்று ஆட்சியர் அலுவலகத்தில்மேற்கொள்ளப்பட்டது.



இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...