கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முனைப்புடன் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை பரப்பினை அதிகரிப்பது தொடர்பான பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் லட்சியமான 'பசுமை தமிழ்நாடு' திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் தலைமையில் அதிகாரிகளை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இக்குழுவானது வனப்பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப்பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல் விவசாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்பினை அதிகரிக்க மரம் வளர்த்தல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை தனியார் பங்களிப்போடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முனைப்புடன் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு இன்று ஆட்சியர் அலுவலகத்தில்மேற்கொள்ளப்பட்டது.



இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...