கோவையில் சிதம்பரனாரின் செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் என்று போற்றப்படும்வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைப்பினர்,பள்ளி கல்லூரிகளில் அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பள்ளிகளில், கட்டுரை போடிகள், பேச்சு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி, தொழிற்சங்க பேரவை தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி தலைவி சூரியகலா மூன்றாவது பகுதி செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...