கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ள இடத்தில் நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு.
கோவை: வால்பாறையில் இன்று ஞாயிற்றுக் கிழமையன்று விநாயகர் சதூர்த்தி தினத்தன்று வைத்து வழிபாடு செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று வால்பாறை அருகே உள்ள நடுமலை ஆற்றுப் பகுதியில் வழக்கமாக விசர்ஜனம் செய்ய உள்ளது.

இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள ஆற்றுப் பகுதியை வால்பாறை நகராட்சியின் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிலைகளை கரைக்க பக்தர்கள் வாகனங்களுடன் வரும்போது எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதைகளை அகலப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள ஆற்றுப் பகுதியை வால்பாறை நகராட்சியின் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிலைகளை கரைக்க பக்தர்கள் வாகனங்களுடன் வரும்போது எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதைகளை அகலப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.