அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், ஈஷா தன்னார்வலர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் சத்குருவை வாழ்த்தி ட்வீட் செய்தனர்.
கோவை: ஈஷா நிறுவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஈஷா யோகா மையத்திலும், அதனைசுற்றியுள்ள கிராமங்களிலும் வெகு விமரிசையாக அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மேலும், சத்குருவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்படி, மத்திய பிரதேச முதல்வர் ஷிவராஜ்சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கமல்நாத், மத்திய அமைச்சர்கள் - நிதின் கட்கரி, ஷோபா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரஷூன் ஜோஷி, பாரம்பரிய நடனக்கலைஞர் சோனல் மான்சிங், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
பிரபலங்கள் மட்டுமல்லாமல், ஈஷா தன்னார்வலர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் ட்விட்டரில் #HappyBirthdaySadhguru
#RiverRevitalizationDay ஆகிய டேக் உடன் சத்குருவை வாழ்த்தி ட்வீட் செய்தனர். இது தேசிய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.